×

தூய்மை பணியாளர்களுக்கு வார விடுப்பு திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வாக்குறுதி

திருச்சி, மார்ச் 26: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். இவர் ஆதரவாளர்களுடன் சென்று அனைத்து வார்டுகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று 24 மற்றும் 37வது வார்டு பகுதிகளான பாலக்கரை செங்குளம் காலனி, எம்ஆர் குடிசை பகுதி, ஒயர்லஸ் ரோடு, வேர்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சி அமைந்ததும் தூய்மை பணியாளர் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தருவேன். தூய்மை பணியாளர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை பெற்று தருவேன். கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். முதியோர் நலத்திட்டங்கள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
பிரசாரத்தில் பாலக்கரை பகுதி செயலாளர் மண்டி சேகர், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Trichy East ,DMK ,Inigo Iruthayaraj ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் வழங்கல்